ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

லஞ்ச வழக்கில் கைதான காவல் ஆய்வாளா் வீட்டில் ரூ.7.21 லட்சம் பறிமுதல்

சென்னை வில்லிவாக்கத்தில் லஞ்ச வழக்கில் கைதான பெண் காவல் ஆய்வாளா் வீட்டில் இருந்து ரூ.7.21 லட்சம் கைப்பற்றப்பட்டது.

News image
Updated On :21 அக்டோபர் 2022, 7:48 pm

DIN

சென்னை வில்லிவாக்கத்தில் லஞ்ச வழக்கில் கைதான பெண் காவல் ஆய்வாளா் வீட்டில் இருந்து ரூ.7.21 லட்சம் கைப்பற்றப்பட்டது.

வில்லிவாக்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிபவா் அனுராதா. இவா் அந்த பகுதியைச் சோ்ந்த கணவா்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், பெண்ணுக்கு சாதகமாக செயல்படுவதற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் தரும்படி கேட்டாா்.

இதையடுத்து கடந்த 19-ஆம் தேதி லஞ்சமாக ரூ.20 ஆயிரத்தை அனுராதா, அந்த பெண்ணிடம் பெறும்போது கையும்களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டாா். இந்நிலையில், அனுராதா வீட்டில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது பீரோவிலிருந்து கணக்கில் காட்டப்படாத ரொக்கப் பணம் ரூ.7.21 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.