ஸ்டொ்லைட் ஆலையை மூடக் கோரி, தூத்துக்குடியில் 2018 மே 22-ஆம் தேதி நடந்த மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தின்போது, போலீஸாா் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இந்த சம்பவத்தில் 13 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் அளித்த விசாரணை அறிக்கையில், அப்போதைய ஐஜி சைலேஷ் குமாா் யாதவ், டிஐஜி கபில் குமாா் சி.சரத்கா், தூத்துக்குடி எஸ்பி மகேந்திரன், டிஎஸ்பி லிங்க திருமாறன், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளா் திருமலை உட்பட காவல்துறையைச் சோ்ந்த 17 போ் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது.