நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ரயில்வே அதிகாரியின் மனைவிக்கு ரயில் நிலையத்தில் பிரசவம்

ரயில் நிலைய அதிகாரியின் மனைவிக்கு ரயில் நிலையத்திலேயே ஆண் குழந்தை பிறந்த சம்பவம் அரக்கோணத்தில் நெகிழ்ச்சியை  ஏற்படுத்தியது.

News image
Updated On :25 அக்டோபர் 2022, 11:52 am IST

ரயில் நிலைய அதிகாரியின் மனைவிக்கு ரயில் நிலையத்திலேயே ஆண் குழந்தை பிறந்த சம்பவம் அரக்கோணத்தில் நெகிழ்ச்சியை  ஏற்படுத்தியது.

திருப்பத்தூர் ரயில் நிலைய மாஸ்டராக அஸ்வின் குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி சாந்தினி (வயது 29). நிறைமாத கர்ப்பிணி.  இவர் சென்னை பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக் கொள்வதற்காக மங்களூரில் இருந்து சென்னை செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில், திருப்பத்தூர் ரயில் நிலைய மாஸ்டரான அஸ்வின்குமார் அழைத்துச்சென்றார்.

ரயில் அரக்கோணம் நிலையத்திற்கு  வந்தபோது சாந்தினிக்கு  பிரசவ வலி அதிகமானது. இது குறித்து அஸ்வின்குமார் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

ரயில், அரக்கோணம் வந்ததும் சாந்தினியை கீழே இறக்கி பெண்கள் தங்கும் அறையில் அரக்கோணம் ரயில்வே போலீஸ் கான்ஸ்டபிள் பரமேஸ்வரி அழைத்துச்சென்றார்.

அங்கு பரமேஸ்வரி  உதவியுடன் சாந்தினிக்கு  அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதைத் தொடர்ந்து சாந்தினி,  அவரது ஆண் குழந்தையை போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸில் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரசவத்திற்கு உதவியாக இருந்த ரயில்வே போலீஸ் கான்ஸ்டபிள் பரமேஸ்வரியை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.  மேலும் திருப்பத்தூர் ஸ்டேஷன் மாஸ்டருக்கு ரயில் நிலையத்திலேயே ஆண் குழந்தை பிறந்த சம்பவம் அரக்கோணத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.