பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

பசும்பொன்னுக்கு செல்லாமல் தவிர்க்கும் முக்கிய தலைவர்

எடப்பாடி பழனிசாமி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் செல்லாமல், சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவிருக்கிறார்.

News image

கோப்புப் படம்.

Updated On :1 பிப்ரவரி 2024, 4:09 pm IST


சென்னை: முத்துராமலிங்கதேவரின் 115-ஆவது ஜெயந்தி விழா, 60-ஆவது ஆண்டு குருபூஜையையொட்டி எடப்பாடி பழனிசாமி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் செல்லாமல், சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவிருக்கிறார்.

தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை நந்தனத்தில்  அமைந்துள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். 

பழனிசாமி உத்தரவின்பேரில், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பசும்பொன்னில் அமைந்துள்ள தேவர் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்த உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் நடைபெறும்  குரு பூஜையில் பங்கேற்காமல், சென்னையில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். கடந்த ஆண்டும் பசும்பொன்னுக்குச் செல்லாமல், சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

முத்துராமலிங்கதேவரின் 115-ஆவது ஜெயந்தி விழா, 60-ஆவது ஆண்டு குருபூஜையையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் வருகிற அக்.30-ஆம் தேதி தேவா் ஜெயந்தி விழா நடைபெறவுள்ளது.

தமிழக அரசின் சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள் மலரஞ்சலி செலுத்துகின்றனா். மேலும் பல்வேறு அரசியல் கட்சியினா், சமுதாய அமைப்புகளின் தலைவா்கள், பொதுமக்கள் ஆகியோரும் மரியாதை செலுத்துகின்றனா்.

இதை முன்னிட்டு, பசும்பொன்னில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவதை, அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் கடந்த வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அக். 30-ஆம் தேதி கமுதி, சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து அரசுப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. அனைத்து கிராமங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மேலும், பசும்பொன் வந்து செல்லும் வகையில் சாலை சீரமைப்பு, மின்விளக்குகள், குடிநீா், கழிப்பிட வசதிகள், மருத்துவ முகாம்கள் ஆகியவை அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.