ரிஷப் ஷெட்டியின் கன்னடப் படமான காந்தாராவைப் பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ரிஷப் ஷெட்டி எழுதி, தயாரித்து, இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள காந்தாரா என்ற கன்னடத் திரைப்படம் சமீபத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டுக்களை குவித்துவருகிறது.
இதனையடுத்து ரூ.17 கோடிக்கு உருவான இப்படம் உலக அளவில் ரூ.170 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேஜிஎஃப் படத்துக்கு பிறகு உலக அளவில் அறியப்படும் கன்னடப் படமாக காந்தாரா இருக்கிறது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக காந்தாரா படத்தைப் பாராட்டி எழுதியுள்ளார். அதில், ''தெரிந்ததை விட தெரியாதது அதிகம் - இதனை காந்தாரவில் சிறப்பாக சொல்லியிருக்கிறார்கள். என் உடல் சிலிர்த்தது.
ரிஷப் ஷெட்டி, எழுத்தாளர், இயக்குநர், நடிகர் என உங்கள் பணி சிறப்பாக இருந்தது. இந்திய சினிமாவின் சிறப்பான படத்தை கொடுத்ததற்காக ஒட்டுமொத்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
âThe unknown is more than the knownâ no one could have said this better in cinema than @hombalefilms #KantaraMovie you gave me goosebumps @shetty_rishab Rishab hats off to you as a writer,director and actor.Congrats to the whole cast and crew of this masterpiece in indian cinema
â Rajinikanth (@rajinikanth) October 26, 2022
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









