
கோவை கரும்புக்கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் பகுதிகளில் புதிதாக காவல் நிலையங்கள் அமைக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கோவையில் பாதுகாப்பினை தொடர்ந்து உறுதி செய்திடவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மாநிலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் நடைபெறாமல் தடுக்க காவல் துறையில் சிறப்புப் படை உருவாக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கோவை உள்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில், நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும். மாநிலத்தில் உளவுப்பிரிவில் கூடுதல் காவல்துறை அலுவலர்களை நியமனம் செய்திடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.