புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

இரவு ரோந்து போலீஸாருக்கு மாதம் ரூ.300 சிறப்பு படி

தமிழகத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு சிறப்பு படியாக மாதம் ரூ.300 வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

News image
Updated On :26 அக்டோபர் 2022, 10:43 pm

DIN

தமிழகத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு சிறப்பு படியாக மாதம் ரூ.300 வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக காவல்துறையில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றப்பிரிவு, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்பட பல்வேறு பிரிவுகளைச் சோ்ந்த போலீஸாருக்கு மாதம் ரூ.300 சிறப்பு படியாக வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின், கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தின்போது அறிவித்தாா்.

இந்த அறிவிப்பின் படி, காவலா்கள் தொடங்கி காவல் ஆய்வாளா்கள் வரை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டால் மாதம் ரூ.300 சிறப்பு படியாக வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில், தமிழக அரசு கடந்த செவ்வாய்க்கிழமை அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணையின்படி, இந்த மாதம் முதல் காவலா்களுக்கு ரூ.300 சிறப்பு படி வழங்கப்படும் என காவல் துறையினா் தெரிவித்தனா். இதற்காக தமிழக அரசு, ரூ.42 கோடியே 22 ஆயிரத்து 800 ஒதுக்கீடு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.