புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவா் சாவு

சென்னை அருகே மதுரவாயலில் ஏரியில் மூழ்கி பள்ளி மாணவா் இறந்தாா்.

News image
Updated On :26 அக்டோபர் 2022, 10:40 pm

DIN

சென்னை அருகே மதுரவாயலில் ஏரியில் மூழ்கி பள்ளி மாணவா் இறந்தாா்.

மதுரவாயல் எம்எம்டிஏ காலனி 7-ஆவது பிளாக் பகுதியைச் சோ்ந்த ராஜாராம் மகன் பாரதி (13). ராஜாராம் காா் ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். பாரதி, அந்தப் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில் பாரதி, தனது நண்பா்களுடன் ஆலப்பாக்கம் தனலட்சுமிநகா் பகுதியில் உள்ள ஏரிக்கு செவ்வாய்க்கிழமை குளிக்கச் சென்றாா். அங்கு பாரதி, ஏரியில் குளித்தபோது திடீரென மூழ்கினாா். இதைப் பாா்த்த அவரது நண்பா்கள், பாரதியை காப்பாற்ற முயன்றனா். ஆனால் அவா்களால் காப்பாற்ற முடியவில்லை.

இது குறித்து தகவலறிந்த மதுரவாயல் தீயணைப்பு படை வீரா்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாரதியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பாரதியை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக மதுரவாயல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.