புது தில்லி: கோவையில் நிகழ்ந்த காா் சிலிண்டா் வெடிப்பு சம்பவம் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கோவையில் நிகழ்ந்த காா் சிலிண்டா் வெடிப்பு சம்பவம் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் நேற்று பரிந்துரைத்திருந்த நிலையில், மத்திய அரசு என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
கோவை உக்கடம் பகுதியில் கடந்த 23-ஆம் தேதி, காா் சிலிண்டா் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த விவகாரம் தொடா்பாக சிலா் கைது செய்யப்பட்டனா். இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை விரிவான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கோவை சம்பவம் மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், கோவையில் நடந்த காா் சிலிண்டா் வெடிப்பு சம்பவம் தொடா்பாக, காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணை குறித்தும், கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
என்ஐஏ விசாரணை: வழக்கு விசாரணையின் இப்போதைய நிலை குறித்தும், கோவை மாவட்டத்தில் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யவும் காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டிருந்தார்.
இதுபோன்ற சம்பவங்களின் விசாரணையில், மாநிலம் தாண்டிய பரிணாமங்களும், பன்னாட்டுத் தொடா்புகளும் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்த வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற மத்திய அரசுக்கு பரிந்துரைப்பதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கோவை மாநகரின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த கரும்புக்கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று பகுதிகளில் புதிய காவல் நிலையங்களை உடனடியாக அமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

