கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு:  நாகையில் கடற்படை அதிகாரிகள் விசாரணை!

மன்னார்வளைகுடா பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது மீனவர்கள் மீது இந்திய கடற்படையினரின் தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில்

News image
நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகை ஆய்வு செய்யும் கடற்படை அதிகாரிகள்
Updated On :27 அக்டோபர் 2022, 7:10 am

DIN


நாகப்பட்டினம்:  மன்னார்வளைகுடா பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது மீனவர்கள் மீது இந்திய கடற்படையினரின் தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நாகையில் கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 15 ஆம் தேதி காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், மயிலாடுதுறை, காரைக்கால், நாகை மாவட்ட மீனவர்கள் 10 பேர் காரைக்காலில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். 

அவர்கள், கடந்த 21ஆம் தேதி மன்னார்வளைகுடா பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது, இந்திய கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகினர்.    

Story image

நாகையில் விசாரணை நடத்தும் கடற்படை அதிகாரிகள்

இதில், மயிலாடுதுறை மாவட்டம், வானகிரியைச்  சேர்ந்த மீனவர் வீரவேல் பலத்தக் காயமடைந்தார். அவர், மதுரை மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லேசான காயங்களுடன் தப்பிய மற்ற 9 மீனவர்களும், நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து வேதாரண்யம் கடலோரக் காவல் நிலையத்தில் கடற்படையினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்திய மீனவர்கள் மீது  கடற்படை தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

Story image

நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகை ஆய்வு செய்யும் கடற்படை அதிகாரிகள்

இந்த நிலையில், இந்திய கடற்படை  கமாண்டர் விஷால் குப்தா தலைமையிலான கடற்படை அதிகாரிகள் வியாழக்கிழமை நாகையில் விசாரணையில் ஈடுபட்டனர்.

நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகில் ஆய்வு மேற்கொண்ட அவர்கள், படகில் ஏற்பட்டுள்ள சேதங்களையும், படகில் பதிந்திருந்த துப்பாக்கி குண்டுகளின் தடயங்களையும் கணக்கிட்டனர்.

பின்னர்,  நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 9 மீனவர்களிடமும் கடற்படை அதிகாரிகள்  விசாரணை மேற்கொண்டனர்.

Story image

நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்கப்பட்ட செல்வம் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு.

இந்திய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் மீனவர் விசைப்படகில் 47 குண்டுகள் துளைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. 

47 குண்டுகள் துளைக்கப்பட்டதற்கான ஓட்டைகள், செல்வம் என்பவர் விசைப்படகில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.