நவம்பர் 6ல் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி: டிஜிபி அறிவுறுத்தல்!
தமிழகத்தில் நவம்பர் 6 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த தமிழக காவல்துறை அனுமதி அளித்துள்ளது.


தமிழகத்தில் நவம்பர் 6 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி அளித்து மாவட்ட காவல்துறைக்கு டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாளன்று தமிழகத்தில் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிருந்த நிலையில் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது.
பின்னர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வருகிற நவம்பர் 6 ஆம் தேதி தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று தமிழக காவல்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி, நவம்பர் 6 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி அளித்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னைகளை கருத்தில் கொண்டு அனுமதி அளிக்குமாறு அந்தந்த மாவட்ட காவல்துறைக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...