முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

வெள்ள பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்: திருச்சியில் அமைச்சர் நேரு பேட்டி

வெள்ள பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 செப்டம்பர் 2022, 11:09 am IST

திருச்சி: வெள்ள பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதி காவிரி ஆற்றில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில், வெள்ளப் பாதுகாப்பு, மீட்பு நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை வியாழக்கிழமை காலை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியை தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையர்  ‌ஆர்.வைத்திநாதன், சட்டப்பேரவை றுப்பினர் எம்.பழனியாண்டி, மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் ப.அம்பிகா, மாநகராட்சி கோட்டத்தலைவர் ஆண்டாள் ராம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் அமைச்சர் நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்சியில் சாலை மற்றும் புதை வடிகால் திட்ட பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழை பெய்வதால் பணிகளில் சற்று தோய்வு ஏற்பட்டுள்ளது என்றாலும் விரைந்து பணிகள் முடிக்க உத்தரவிடப்பட்டு மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர் கண்காணிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதே போல சென்னையிலும் மழைக்காலத்திற்கு முன்பே மழை வெள்ளங்களால் பாதிப்புகள் ஏற்படக்கூடிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பூமிக்கு அடியில் குடிநீர் குழாய் புதை வடிகால் திட்ட குழாய்கள், தொலைத் தொடர்புத்துறை வயர்கள் இருப்பதால் அவற்றில் பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக முதல்வர் நேரடி கண்காணிப்பின் பேரில் சென்னையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றனர் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.