திமுக முப்பெரும் விழாவில் விருது பெறுவோரின் விவரத்தை கட்சித் தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ளது
பெரியார், அண்ணா பிறந்த நாள், திமுகவின் தொடக்க நாள், இந்த மூன்று நாள்களையும் இணைத்து ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ஆம் தேதி திமுகவின் முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு முப்பெரும் விழா வரும் 15ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறுகிறது.
இதையும் படிக்க- டி20 போட்டி: சச்சின் தலைமையிலான அணி அறிவிப்பு
முப்பெரும் விழாவில் விருதுகள் பெறும் விருதாளர்களின் பெயர்களை திமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, பெரியார் விருது சம்பூர்ணம் சாமிநாதனுக்கும், அண்ணா விருது கோவை இரா.மோகனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கலைஞர் விருது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கும், பாவேந்தர் விருது புதுச்சேரி சி.பி.திருநாவுக்கரசுக்கும், பேராசிரியர் விருது குன்னூர் சீனிவாசனுக்கும் வழங்கப்படவுள்ளது.