சாலைப் பாதுகாப்பு உலக சீரிஸ் போட்டிக்கான சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சாலைப் பாதுகாப்பு உலக சீரிஸ் என்கிற டி20 போட்டி, 2020 முதல் நடைபெற்று வருகிறது. முதல் பருவம் கடந்த வருடம் நிறைவுபெற்றது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் இப்போட்டி, சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது.
கடந்த வருடம் ராய்ப்பூரில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு உலக சீரிஸ் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய லெஜன்ட்ஸ் அணி, இறுதிச்சுற்றில் இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்றது. கடந்த வருடப் போட்டியில் கலந்துகொண்ட பிறகு சச்சின் டெண்டுல்கர், யூசுப் பதான், பத்ரிநாத், இர்பான் பதான் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்.
இந்நிலையில் இந்த வருட சாலைப் பாதுகாப்பு டி20 போட்டியில் சச்சின் தலைமையிலான இந்திய லெஜண்ட்ஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 22 நாள்களுக்கு நடக்கும் இந்தப் போட்டி செப்டம்பர் 10 முதல் தொடங்குகிறது. கான்பூரில் முதல் ஆட்டமும் அரையிறுதி, இறுதிச்சுற்று ஆட்டங்கள் ராய்பூரிலும் நடைபெறவுள்ளன. அக்டோபர் 1 அன்று இறுதிச்சுற்று நடைபெறுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு பிரையன் லாராவும் ஆஸ்திரேலிய அணிக்கு ஷேன் வாட்சனும் இங்கிலாந்து அணிக்கு ஐயன் பெல்லும் நியூசிலாந்து அணிக்கு ராஸ் டெய்லரும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
சச்சின் தலைமையிலான இந்திய லெஜண்ட்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்:
சச்சின் டெண்டுல்கர் (கேப்டன்), யுவ்ராஜ் சிங், இர்பான் பதான், யூசுப் பதான், ஹர்பஜன் சிங், முனவ் படேல், பத்ரிநாத், ஸ்டூவர்ட் பின்னி, நமன் ஓஜா (விக்கெட் கீப்பர்), கோனி, பிரக்யான் ஓஜா, வினய் குமார், அபிமன்யூ மிதுன், ராஜேஷ் பவார், ராகுல் சர்மா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இ. மெயில்களை எழுதுவதில் செயற்கை நுண்ணறிவு

குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள்
தொழில்நுட்பக் கோளாறு: ராஞ்சியில் இருந்து புவனேஸ்வர் புறப்படவிருந்த விமானம் ரத்து!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியை அறிவிக்கும் முன்பே சிக்கலில் இந்தியா!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



