சேலம்: சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே தின்னப்பட்டி கிராமத்தில் ஏற்படவிருந்த ரயில் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
ரயில்வே தண்டவாள யார்டில் மர்ம நபர்கள் கல்லையும், இரும்பு துண்டு ஒன்றையும் வைத்திருந்ததை ஒருவர் பார்த்து தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து, ரயில்வே ஊழியர் அருண் விரைந்து செயல்பட்டு தண்டவாளத்தில் இருந்த கல், இரும்பு துண்டை அகற்றியதால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சென்னையில் பாரத் பெட்ரோலிய நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு?
தண்டவாளத்தில் கல், இரும்பு துண்டை வைத்தது யார் என சேலம் ரயில்வே காவல் துறையினர் மற்றும் தீவட்டிப்பட்டி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.