டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு வருகிற அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நிர்வாக காரணங்களால் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறவிருந்த குரூப் 1 முதல்நிலைத் தேர்வு தற்போது நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நிர்வாக காரணங்களுக்காக தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.