மகாகவி பாரதியார் 101வது நினைவு நாளையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மேலநாகையில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு மண்டபத்தில் உள்ள பாரதியார் சிலைக்கு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக நாட்டுபுறவியல் துறைத் தலைவர் இரா.காமராசு, மன்னார்குடி வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரா.இயேசுதாஸ், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற கிளைத் தலைவர் க.தங்கபாபு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நகத் தலைவர் எஸ்.சிவசுப்ரமணியன், மன்னார்குடி தமிழ்ச் சங்கத் தலைவர் டி.வி ஜயேந்திரன், மன்னை மனிதம் லயன்ஸ் சங்கத் தலைவர் எஸ்.ராமதாஸ், ராஜமன்னை ஜேசிஐ தலைவர் சபரிராஜன், ஸ்ரீ பாரதிதாசன் அகதாமி தலைவர் ஜெ. அன் பழகன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் யு.எஸ்.பொன்முடி, எல்ஐசி ஊழியர் சங்க கோட்ட நிர்வாகி வீ.சேதுராமன், சிபிஎம் நகரச் செயலர் ஜி.தாயுமானவன், சிஐடியு மாவட்ட நிர்வாகி ஜி.ரெகுபதி, மன்னார்குடி அரசுக் கல்லூரி என்எஸ்எஸ் திட்ட அலுவலர் பிரபாகரன், பிஎஸ்என்எல் ஓய்வு பெற்ற ஊழியர் சங்க நிர்வாகி பிச்சைக் கண்ணு, பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் பாரதி ஆர்.பூமிநாதன், துணை நிர்வாகிகள் விஜய், குணசேகரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.