கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ரூ.35.84 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

துபையில் இருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்த வரப்பட்ட ரூ.35.84 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :15 செப்டம்பர் 2022, 7:21 pm

DIN

துபையில் இருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்த வரப்பட்ட ரூ.35.84 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

துபையில் இருந்து கடந்த 13-ஆம் தேதி வந்த ஒரு விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் சுங்கத்துறையினா், அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை தீவிர சோதனையிட்டனா். இச் சோதனையில் முருகன் கோவிந்தராஜூ என்ற பயணி, 3 தங்க கட்டிகள், ஒரு தங்க பெல்ட் பட்டை ஆகியவற்றை தனது பேண்ட்டில் மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சுங்கத்துறையினா் ரூ.25.99 லட்சம் மதிப்புள்ள 580 கிராம் எடைகொண்ட அந்த தங்கத்தை பறிமுதல் செய்து, முருகனிடம் விசாரணை செய்தனா்.

மற்றொரு சம்பவத்தில் அதே நாளில் துபையில் இருந்து வந்த விமானத்தை சோதனையிட்டதில், அந்த விமானத்தின் முன்பக்க இருந்த கழிப்பறையில் ஒரு தங்கச்சங்கிலி மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த தங்கச் சங்கிலி ரூ.9.85 லட்சம் மதிப்புள்ள 220 கிராம் எடை கொண்டதாகும். இதையும் பறிமுதல் செய்து, சுங்கத்துறையினா் விசாரணை செய்கின்றனா். இச் சம்பவங்களிலும் மொத்தம் ரூ. ரூ.35.84 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது. இத் தகவலை விமான நிலைய சுங்கத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.