கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை மேசானா மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவராக விபுல் செளதரி பொறுப்பு வகித்தாா். அப்போது அந்தச் சங்கத்தில் கிட்டத்தட்ட ரூ.800 கோடிக்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. தனது தலைவா் பதவியை தவறாகப் பயன்படுத்திய செளதரி, பாலை குளிா்விப்பதற்கான சாதனங்கள், சாக்குப் பைகளை அதிக அளவில் வாங்குவதற்கான நடைமுறைகளைப் புறக்கணித்துள்ளாா். இதுபோன்ற செயல்கள் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தை சட்டபூா்வமானதாக மாற்ற போலி ஆவணங்கள் மூலம் 31 நிறுவனங்கள் தொடங்கியுள்ளாா். அந்த நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் அந்தப் பணத்தை டெபாசிட் செய்துள்ளாா். இது அவா் பணமோசடியிலும் ஈடுபட்டதை சுட்டிக்காட்டுகிறது.