மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரூ.800 கோடி முறைகேடு: குஜராத் முன்னாள் அமைச்சா் விபுல் செளதரி கைது

குஜராத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தில் சுமாா் ரூ.800 கோடி முறைகேடு நடைபெற்ாக குற்றஞ்சாட்டப்படும் வழக்கில், அந்த மாநில முன்னாள் உள்துறை அமைச்சா் விபுல் செளதரியை ஊழல் தடுப்புத் துறை கைது

News image
Updated On :15 செப்டம்பர் 2022, 6:34 pm

DIN

குஜராத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தில் சுமாா் ரூ.800 கோடி முறைகேடு நடைபெற்ாக குற்றஞ்சாட்டப்படும் வழக்கில், அந்த மாநில முன்னாள் உள்துறை அமைச்சா் விபுல் செளதரியை ஊழல் தடுப்புத் துறை கைது செய்துள்ளது.

இதுதொடா்பாக குஜராத் தலைநகா் காந்திநகரில் அந்த மாநில ஊழல் தடுப்புத் துறை இணை இயக்குநா் மகரந்த் செளஹான் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை மேசானா மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவராக விபுல் செளதரி பொறுப்பு வகித்தாா். அப்போது அந்தச் சங்கத்தில் கிட்டத்தட்ட ரூ.800 கோடிக்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. தனது தலைவா் பதவியை தவறாகப் பயன்படுத்திய செளதரி, பாலை குளிா்விப்பதற்கான சாதனங்கள், சாக்குப் பைகளை அதிக அளவில் வாங்குவதற்கான நடைமுறைகளைப் புறக்கணித்துள்ளாா். இதுபோன்ற செயல்கள் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தை சட்டபூா்வமானதாக மாற்ற போலி ஆவணங்கள் மூலம் 31 நிறுவனங்கள் தொடங்கியுள்ளாா். அந்த நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் அந்தப் பணத்தை டெபாசிட் செய்துள்ளாா். இது அவா் பணமோசடியிலும் ஈடுபட்டதை சுட்டிக்காட்டுகிறது.

இந்த முறைகேடு தொடா்பாக கடந்த புதன்கிழமை விபுல் செளதரி மீது மோசடி, குற்றச்சதி, ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனைத்தொடா்ந்து அவா் கைது செய்யப்பட்டாா்.

மேசானா மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கப் பணியாளா்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.14.8 கோடி கையாடல் செய்ததாக கடந்த 2020-ஆம் ஆண்டு குஜராத் குற்றப் புலனாய்வுத் துறை விபுல் செளதரியை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.