மதுரையில் ஆவின் பால் பாக்கெட்டில் 'ஈ' இருந்ததால் தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் ஆவின் பால் பாக்கெட்டில் ஈ' இருந்தது. இதுதொடர்பான புகாரில் பால் பாக்கெட் செய்யும் தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பால் தயாரிப்பு பணியில் இருந்த ஆவின் உதவி மேலாளர் சிங்கார வேலனிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக ஆவின் தலைமை மேலாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.
ஆவின் பாலகங்களில் அதிகாரிகள் குழு நாளை முதல் தொடர் ஆய்வு நடத்த உள்ளதாகவும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. நாகமலை புதுக்கோட்டையில் விற்பனையான ஆவின் பால் பாக்கெட் டில் 'ஈ' இருந்தது தொடர்பான விடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.