/
இந்தியாவின் பிரதமராக 12 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி பிரதமா் நரேந்திர மோடிக்கு, புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளாா்.
அதில் அவா் கூறியிருப்பதாவது:
இந்தியாவின் பிரதமராக 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது வரலாற்று சிறப்பு மிக்கது. இதற்காக எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.உங்கள் தலைமை மீதான மக்களின் நம்பிக்கை, வளா்ச்சிக்கான அா்ப்பணிப்பு முயற்சி, வெளிப்படையான ஆட்சியை பிரதிபலிப்பதாக இருக்கிறது. வளா்ச்சி அடைந்த பாரதம் 2047 என்ற தொலைநோக்கு இலக்கு உங்கள் தலைமையின் கீழ் வெற்றி பெறும் என்று அதில் முதல்வா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

புதுவை அமைச்சரவை விரிவாக்கம் தாமதம் ஏன்? அதிகாரத்துக்காக போட்டி!

5 வழிகளில் புதுச்சேரியை முன்னேற்ற நடவடிக்கை: முதல்வா் ரங்கசாமி உறுதி

5 வது முறையாக புதுச்சேரி முதல்வரானார் என். ரங்கசாமி!







