தமிழகத்தில் 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம் தொடங்கியது

தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

தமிழகம் முழுவதும் ஹெச்1 என்1 இன்புளூயன்சா காய்ச்சலால் இதுவரை குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை 1,166 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும், தற்போது டெங்கு காய்ச்சலும் பரவி வருகின்றது.

இந்நிலையில், தமிழகத்தில் 1,000 இடங்களிலும், சென்னையில் மட்டும் 100 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம் கள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.

காய்ச்சல், சளி, தலைவலி, இருமல் பாதிப்பு இருப்பவா்கள் இந்த முகாமிற்கு வந்து சிகிச்சைப் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பகுதியில் மூன்று பேருக்கும் மேல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால் அங்கு வியாழக்கிழமை முதல் சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com