ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

நடிகர் சூரியின் உணவகத்தில் திடீர் சோதனை: சிக்கியது என்ன?

பிரபல நகைச்சுவை நடிகர் சூரியின் உணவகங்களில் வணிக வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

News image
Updated On :21 செப்டம்பர் 2022, 8:48 am IST

பிரபல நகைச்சுவை நடிகர் சூரியின் உணவகங்களில் வணிக வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

மதுரையில் தெப்பக்குளம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடிகர் சூரி மற்றும் அவரது சகோதரருக்கு சொந்தமாக ‘அம்மன்’ என்ற பெயரில் உணவகம் செயல்பட்டு வருகின்றது.

இந்த உணவகத்தின் பல்வேறு கிளைகள் சமீபத்தில்தான் தொடங்கப்பட்டது என்றாலும், நடிகர் சூரியின் உணவகம் என்பதால் எப்போதும் கூட்டமாகவே காணப்படும்.

இந்த நிலையில், அம்மன் உணவகத்திற்கு தேவையான அரிசி, எண்ணெய், மாவு உள்ளிட்ட சமையலுக்கு தேவையான பொருள்கள் அனைத்தும் மொத்தமாக ஆவணமின்றி வாங்கப்படுவதாக புகார் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, உணவகத்தின் தலைமையிடமான தெப்பக்குளம் கிளையில் நேற்று மாலை 5 பேர் கொண்ட வணிக வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில், உணவகத்தின் நிர்வாகிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.