திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான வழக்குகள் ரத்து

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.  
திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான வழக்குகள் ரத்து
Published on
Updated on
1 min read

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. 

கடந்த 1995ஆம் ஆண்டு குரோம்பேட்டையில் தனியார் நிறுவனத்தை வாங்கியது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க கோரியும் ஜெகத்ரட்சகன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று நடைபெற்றது. அப்போது ஜெகத்ரட்சகன் மீதான 2 நில அபகரிப்பு வழக்குகளை ரத்து செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com