முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தமிழகத்தில் மருத்துவர் பணியிடங்கள் 2 மாதத்தில் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் மருத்துவர் பணியிடங்கள் 2 மாதத்தில் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :23 செப்டம்பர் 2022, 3:10 pm IST

தமிழகத்தில் மருத்துவர் பணியிடங்கள் 2 மாதத்தில் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இன்று தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி கிராமத்தில் ரூ.1,50,00,000 செலவில் புதிய மருத்துவக் கட்டடங்கள் திறந்து வைப்பதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தூத்துக்குடிக்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்ததாவது:

எந்தெந்த பகுதியில் 3 பேருக்கு அதிகமான நபர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதோ அந்த இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று முதல் நடத்தப்பட்டு வருகிறது. பருவகால மாற்றங்களிலால் வரும் இந்த காய்ச்சலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

காய்ச்சல் ஏற்படுபவர்கள் 3 அல்லது 4 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டாலே போதுமானது. எச்1 ஏ1 காய்ச்சல் உள்ளவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.  ஏனென்றால் நீர்த்திவளைகள் மூலம் பரவும் வாய்ப்பு அதிகம்.

இந்த மாதம் 30-ந் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசிகள் இலவசம் என்ற மத்திய அரசின் அறிவிப்பின்படி தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த 4,308 காலி பணியிடங்கள் உள்ளன. அவை அனைத்தும் 2 மாதத்திற்குள் முழுமையாக நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன்  தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.