கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தமிழகத்தில் மருத்துவர் பணியிடங்கள் 2 மாதத்தில் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் மருத்துவர் பணியிடங்கள் 2 மாதத்தில் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :23 செப்டம்பர் 2022, 9:40 am

DIN

தமிழகத்தில் மருத்துவர் பணியிடங்கள் 2 மாதத்தில் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இன்று தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி கிராமத்தில் ரூ.1,50,00,000 செலவில் புதிய மருத்துவக் கட்டடங்கள் திறந்து வைப்பதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தூத்துக்குடிக்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்ததாவது:

எந்தெந்த பகுதியில் 3 பேருக்கு அதிகமான நபர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதோ அந்த இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று முதல் நடத்தப்பட்டு வருகிறது. பருவகால மாற்றங்களிலால் வரும் இந்த காய்ச்சலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

காய்ச்சல் ஏற்படுபவர்கள் 3 அல்லது 4 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டாலே போதுமானது. எச்1 ஏ1 காய்ச்சல் உள்ளவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.  ஏனென்றால் நீர்த்திவளைகள் மூலம் பரவும் வாய்ப்பு அதிகம்.

இந்த மாதம் 30-ந் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசிகள் இலவசம் என்ற மத்திய அரசின் அறிவிப்பின்படி தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த 4,308 காலி பணியிடங்கள் உள்ளன. அவை அனைத்தும் 2 மாதத்திற்குள் முழுமையாக நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன்  தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.