ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

ஆம்பூர்: காலணி தொழிற்சாலையில் தீ விபத்து

ஆம்பூர் அருகே தனியார் காலணி தொழிற்சாலையில் மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.

News image

ஆம்பூர் காலணி தொழிற்சாலையில் தீ விபத்து

Updated On :1 பிப்ரவரி 2024, 3:55 pm IST

ஆம்பூர் அருகே தனியார் காலணி தொழிற்சாலையில் மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னவரிக்கம் பகுதியில் தனியார் (பரிதா) காலணி தொழிற்சாலை  செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண் பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று மாலை 7 மணி அளவில் தொழிற்சாலையில் உதிரிபாகங்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில்  திடீரென ஏற்பட்ட  தீ விபத்தால் தொழிற்சாலை முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. இதனைக் கண்ட அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறியடித்து தொழிற்சாலையை விட்டு வெளியேறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆம்பூர் வாணியம்பாடி பேரணாம்பட்டு குடியாத்தம் ஆலங்காயம் நாட்றம்பள்ளி  உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் டிராக்டர் மூலம் தண்ணீர் வரவழைக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் கிராம மக்கள் உதவியுடன் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக போராடி கொழுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும் தொழிற்சாலையில் ஏற்பட்ட  தீ விபத்தால் சுமார் 5 கோடி மதிப்பிலான காலணி மற்றும் தோல் உதிரிபாகங்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.  தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த  ரசாயனப் பொருட்களும் தீயில் எரிந்ததால்  புகை மூட்டத்துடன் காணப்பட்டதால் கிராம மக்கள் மூச்சுத் திணறலுக்கு உள்ளாகி அவதிப்பட்டனர்.

மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் தொடர்ந்து வருமான வரித்துறையினர் பரீதா குழுமத்திற்கு சொந்தமான 15க்கும் மேற்பட்ட காலணி மற்றும் தோல்  தொழிற்சாலைகளில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.