போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு: மேலும் ஒருவர் கைது

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக சதாம் உசேன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

News image

பாலகிருஷ்ணன்

Updated On :26 செப்டம்பர் 2022, 4:04 pm

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக சதாம் உசேன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் தொடர்புடையதாக ஏற்கெனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இது தொடர்பாக பேசிய கோவை காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக தற்போது சதாம் உசேன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், பிஎஃப்ஐ துடியலூர் அமைப்பின் பொறுப்பாளராக இருந்துள்ளார். மேலும் இவருடன் தொடர்புடையவர்கள் யார் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விசாரணையின் அடிப்படையில் குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும், பெட்ரோல் குண்டு வீச்சில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்று புலன் விசாரணை மேற்கொள்ளப்படும். தலைமறைவாக உள்ளவர்களை காவல் துறை தேடி வருகிறது எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.