வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு: மேலும் ஒருவர் கைது

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக சதாம் உசேன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

News image

பாலகிருஷ்ணன்

Updated On :26 செப்டம்பர் 2022, 9:34 pm IST

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக சதாம் உசேன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் தொடர்புடையதாக ஏற்கெனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இது தொடர்பாக பேசிய கோவை காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக தற்போது சதாம் உசேன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், பிஎஃப்ஐ துடியலூர் அமைப்பின் பொறுப்பாளராக இருந்துள்ளார். மேலும் இவருடன் தொடர்புடையவர்கள் யார் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விசாரணையின் அடிப்படையில் குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும், பெட்ரோல் குண்டு வீச்சில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்று புலன் விசாரணை மேற்கொள்ளப்படும். தலைமறைவாக உள்ளவர்களை காவல் துறை தேடி வருகிறது எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.