சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பொள்ளாச்சி பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்: 3 பேர் கைது

பொள்ளாச்சியில் இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 3 பேர் போலீசார் கைது செய்துள்ளனர். 

News image

கோப்புப் படம்

Updated On :26 செப்டம்பர் 2022, 11:36 am

DIN


பொள்ளாச்சியில் இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 3 பேர் போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை, பொள்ளாச்சி, ஈரோடு ஆகிய இடங்களில் பாஜக, இந்து முன்னணி பிரமுகா்களின் கடைகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. 

கடந்த 22 ஆம் தேதி இரவு பொள்ளாச்சியில் இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகளின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவமும் நடைபெற்றது. இதுதொடர்பாக தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. 

இதையடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து தனிப்படை போலீசார், சம்பவம் நடந்த இடங்களில் உள்ள சிசிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த பதிவுகளை ஆய்வு செய்தனர்.  

இதனடிப்படையில், பொள்ளாச்சியில் ஐந்து சம்பவங்களில் ஈடுபட்ட பொள்ளாச்சி ஊத்துக்காடு சாலை பகுதியைச் சேர்ந்த முகமது ரஃபீக், செர்ரிஸ் காலனி பகுதியைச் சேர்ந்த மாலிக் என்கிற சாதிக் பாஷா, சூலேஷ்வரன் பட்டி மகாத்மா காந்தி வீதியைச் சேர்ந்த ரமீஸ் ராஜா ஆகிய மூன்று பேரையும் திங்கள்கிழமை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கைது செய்யப்பட்ட மூன்று பேரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர் என்பதும், முகமதி ரபிக் அந்த அமைப்பின் பொள்ளாச்சி நகர தலைவர் என்பதும் தெரியவந்துள்ளது. 

மேலும், அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.