திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

கரோனா நோயாளிகள் இல்லாத முதல்நாள்: ராஜீவ் காந்தி மருத்துவமனை சாதனை

கரோனா பேரிடர் தொடங்கியது முதல், ஒவ்வொரு நாளும் போராட்டக்களமாக இருந்த சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, இன்று கரோனா நோயாளிகள் இல்லாத முதல்நாள் என்ற சாதனையை படைத்துள்ளது.

News image

கரோனா நோயாளிகள் இல்லாத முதல்நாள்: ராஜீவ் காந்தி மருத்துவமனை சாதனை

Updated On :12 ஏப்ரல் 2022, 12:55 pm IST


சென்னை: கரோனா பேரிடர் தொடங்கியது முதல், ஒவ்வொரு நாளும் போராட்டக்களமாக இருந்த சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, இன்று கரோனா நோயாளிகள் இல்லாத முதல்நாள் என்ற சாதனையை படைத்துள்ளது.

இந்தியாவுக்குள் கரோனா நுழைந்து விட்டது என்ற செய்தி வெளியானதுமே, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கரோனா இரண்டு அலைகளின் போதும் ஏராளமான நோயாளிகள் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கரோனா நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் கரோனா நோயாளிகளுடன் ஆம்புலன்ஸ்கள் இந்த மருத்துவமனை வாயிலில் நீண்ட தூரம் நின்றிருந்த காட்சிகள், கரோனாவின் கோரத்தாண்டவத்தை எடுத்துச் சொல்வதாக இருந்தது.

இந்த நிலையில், கரோனா பாதித்து சிகிச்சை பெற்றுவந்த கடைசி நோயாளியும் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இன்று முதல் முறையாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் இல்லாத நாள் என்ற சாதனையை மருத்துவமனை படைத்துள்ளது.

கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த வளாகம் இன்று நோயாளிகள் இல்லாமல் இருந்ததைப் பார்த்து மருத்துவர்களும், ஊழியர்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.