விருதுநகரில் மின்னல் தாக்கி கட்டட தொழிலாளர்கள் 4 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி நகரில் புதிதாக வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
அதே நகரைச் சேர்ந்த சூர்யா(22), ரோசல்பட்டியைச் சேர்ந்த ஜக்கம்மாள்(55), கார்த்திக்(28), முருகன்(24) ஆகியோர் கட்டுமானப் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
இந்நிலையில், அப்பகுதியில் திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. அப்போது, எதிர்பாராத விதமாகக் கட்டடத்தின் மாடியில் இருந்த சூர்யா உள்ளிட்ட 4 பேரும் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதையடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இச்சம்பவம் குறித்து பாண்டியன் நகர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.