5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 7 பேர் பலி மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!
/

சிறுமியின் வருத்தம்... விருந்து வைத்த விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா!

விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகாவால் வைரலான சிறுமி...

News image

சிறுமியின் குடும்பத்துடன் விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா

Updated On :22 மார்ச் 2026, 3:44 pm IST

சிறுமி ஒருவரின் விடியோவை கண்ட விஜய் தேவரகொண்டா அவரை நேரில் அழைத்து விருந்தளித்துள்ளார்.

நீண்ட நாள்களாக காதலித்து வந்த நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை ரஷ்மிகா மந்தனாவுக்கு கடந்த பிப். 26 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

இந்த இணைக்கு இந்தியளவில் வாழ்த்துகள் கிடைத்ததுடன் திருமண புகைப்படங்கள் மிக அதிகளவிலான விருப்பங்களைப் பெற்றது.

இந்த நிலையில், சில நாள்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் லக்கி என்கிற புனைபெயர் கொண்ட சிறுமி ஒருவர், ‘என்னை ஏன் திருமணத்திற்கு அழைக்கவில்லை?’ என மழலைக் குரலில் விஜய் தேவரகொண்டாவிடமும் ரஷ்மிகாவிடமும் கேள்வியெழுப்பினார்.

இதனைக் கண்ட விஜய் தேவரகொண்டா, ”உன்னை எங்கள் வீட்டு மதிய விருந்துக்கு அழைக்கிறோம். உனக்கு என்ன புடிக்கும் என சொல்” எனப் பதிலளித்திருந்தார்.

அதேபோல், அச்சிறுமியையும் அவரது குடும்பத்தினரையும் வீட்டுக்கு அழைத்து விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா இணை இனிப்புடன் கூடிய மதிய விருந்தளித்து அச்சிறுமிக்கு இன்ப அதிர்ச்சியளித்தனர். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதுடன் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.