புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அத்திக்கடவு திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி தீர்த்தக்குட யாத்திரை

அத்திக்கடவு திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலிருந்து மாட்டு வண்டியில் தீர்த்தக்குடம் எடுத்து போராட்டக்குழுவினர் வியாழக்கிழமை யாத்திரை சென்றனர்.

News image

அத்திக்கடவு திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி மாட்டு வண்டியில் தீர்த்தக்குடம் எடுத்து போராட்டக்குழுவினர்.

Updated On :14 ஏப்ரல் 2022, 6:48 am

DIN


அவிநாசி: அத்திக்கடவு திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலிருந்து மாட்டு வண்டியில் தீர்த்தக்குடம் எடுத்து போராட்டக்குழுவினர் வியாழக்கிழமை யாத்திரை சென்றனர்.

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி, ஆண்டுதோறும் சித்திரை முதல் நாள் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளிம்மன் கோயிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அவரவர் ஊர்களிலில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.

8 ஆண்டுகளாக நடைபெற்று இந்நிகழ்வின் மற்றொரு பகுதியாக, அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை முழுமையாக இணைத்து 2 ஆவது திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி, கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் இருந்து தீர்த்தம் எடுத்து திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயிலுக்கு மாட்டு வண்டி, குதிரை வண்டியில் யாத்திரை சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.