நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அத்திக்கடவு திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி தீர்த்தக்குட யாத்திரை

அத்திக்கடவு திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலிருந்து மாட்டு வண்டியில் தீர்த்தக்குடம் எடுத்து போராட்டக்குழுவினர் வியாழக்கிழமை யாத்திரை சென்றனர்.

News image

அத்திக்கடவு திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி மாட்டு வண்டியில் தீர்த்தக்குடம் எடுத்து போராட்டக்குழுவினர்.

Updated On :14 ஏப்ரல் 2022, 12:18 pm IST


அவிநாசி: அத்திக்கடவு திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலிருந்து மாட்டு வண்டியில் தீர்த்தக்குடம் எடுத்து போராட்டக்குழுவினர் வியாழக்கிழமை யாத்திரை சென்றனர்.

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி, ஆண்டுதோறும் சித்திரை முதல் நாள் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளிம்மன் கோயிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அவரவர் ஊர்களிலில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.

8 ஆண்டுகளாக நடைபெற்று இந்நிகழ்வின் மற்றொரு பகுதியாக, அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை முழுமையாக இணைத்து 2 ஆவது திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி, கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் இருந்து தீர்த்தம் எடுத்து திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயிலுக்கு மாட்டு வண்டி, குதிரை வண்டியில் யாத்திரை சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.