அத்திக்கடவு திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி தீர்த்தக்குட யாத்திரை

அத்திக்கடவு திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலிருந்து மாட்டு வண்டியில் தீர்த்தக்குடம் எடுத்து போராட்டக்குழுவினர் வியாழக்கிழமை யாத்திரை சென்றனர்.
அத்திக்கடவு திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி மாட்டு வண்டியில் தீர்த்தக்குடம் எடுத்து போராட்டக்குழுவினர்.
அத்திக்கடவு திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி மாட்டு வண்டியில் தீர்த்தக்குடம் எடுத்து போராட்டக்குழுவினர்.
Published on
Updated on
1 min read


அவிநாசி: அத்திக்கடவு திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலிருந்து மாட்டு வண்டியில் தீர்த்தக்குடம் எடுத்து போராட்டக்குழுவினர் வியாழக்கிழமை யாத்திரை சென்றனர்.

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி, ஆண்டுதோறும் சித்திரை முதல் நாள் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளிம்மன் கோயிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அவரவர் ஊர்களிலில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.

8 ஆண்டுகளாக நடைபெற்று இந்நிகழ்வின் மற்றொரு பகுதியாக, அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை முழுமையாக இணைத்து 2 ஆவது திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி, கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் இருந்து தீர்த்தம் எடுத்து திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயிலுக்கு மாட்டு வண்டி, குதிரை வண்டியில் யாத்திரை சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com