சென்னை: மாற்றியமைக்கப்பட்டுள்ள புதிய பொறியியல் பாடத்திட்டம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாகும் என அண்ணா பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 12-ல் நடைபெற உள்ள அண்ணா பல்கலைக்கழக கல்விக்குழு கூட்டத்தில் புதிய பாடத்திட்டத்துக்கான ஒப்புதல் பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆராய்ச்சி ஊக்குவித்தல், தனித்திறனை வெளிக்கொணருதல், தொழில்முனைவோரை உருவாக்கும் வகையில் பாடத்திட்டம் அமையயுள்ளது. வேலைவாய்ப்பு, தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில் பொறியியல் பாடத்திட்டம் 20 ஆண்டுக்குப் பின் மாற்றப்பட உள்ளது.
இதையும் படிக்க: நாட்டில் மேலும் 16,167 பேருக்கு கரோனா
பொறியியல் படிப்பிற்கான அண்ணா பல்கலைக் கழகத்தின் புதிய பாடத்திட்டம் நடப்பு கல்வியாண்டில் அமலாக உள்ளது.