தூத்துக்குடி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பெத்து ரெட்டிபட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவர் தனது மனைவி சங்கரேஷ்வரி (62) உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களுடன் ஞாயிற்றுக்கிழமை காலை திருச்செந்தூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
தூத்துக்குடி அருகே உள்ள குறுக்குச்சாலை பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென டயர் வெடித்து, நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், காரில் பயணம் செய்த பழனிசாமியின் மனைவி சங்கரேஷ்வரி, அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த மருதாயி (55) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், பழனிசாமி, அவரது மகன் கனக தர்மராஜ், மருமகள் முத்துலட்சுமி, குழந்தைகள் ஓவியா , நிவிட் குரு, கார் ஓட்டுநர் சங்கர் ஆகியோர் காயம் அடைந்தனர். விபத்து குறித்து ஓட்டப்பிடாரம் காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.