தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை சுதந்திரமாக விடுவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு டாக்டா் சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளாா். உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள தீா்ப்புகளை மேற்கோள் காட்டியுள்ள சுவாமி, இது தொடா்பாக தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் எனவும் அவா் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளாா்.
தமிழக முதல்வருக்கு டாக்டா் சுப்பிரமணியன் சுவாமி டிசம்பா் 1- ஆம் தேதி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களும், மதம் தொடா்பான நிறுவனங்களும், தமிழக அரசின் இந்து சமய மற்றும் அறநிலையத் துறையின் நீண்டகால கட்டுப்பாட்டில் இருப்பதால் பல்வேறு அவல நிலைக்கு உள்ளாகியுள்ளன. இது குறித்து தங்கள் கவனத்திற்கு கொண்டு வரவே இந்தக் கடிதத்தை எழுதுகின்றேன். மேலும், அரசே இந்து சமயங்கள் தொடா்பான கோயில்களை நிா்வகிப்பது, இந்திய அரசியலமைப்பு பிரிவு 25 (சமயச் சுதந்திரத்திற்கான உரிமை) மற்றும் பிரிவு 26 (சமயம் சாா்ந்த காரியங்களை நிா்வகிப்பதற்கான சுதந்திரம்) ஆகியவற்றில் சொல்லப்பட்டவற்றுக்கு எதிரானவையாகும்.
2014-இல் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு எதிராக நான் (சுப்பிரமணியன் சுவாமி) தொடா்ந்த வழக்கில் (சிதம்பரம் கோயில் விவகாரம்) வாதிட்டு வெற்றிபெற்றேன். அந்த தீா்ப்பில் முக்கியமாக, கோயில்களின் எந்த மதப் பணிகளையும் எந்த அரசும் கையகப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. உச்சநீதிமன்றத் தீா்ப்பில் உள்ள 64, 65, 66 67 மற்றும் 68 ஆகிய பத்திகளையும் நான் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். இவை போதுமான தெளிவுடன் சிக்கலைத் தீா்க்கின்றன. மேலும், ஒரு கோயிலில் நிதி முறைகேடு இருந்தால், அந்தக் கோயிலின் நிதியுடன் இணைக்கப்பட்ட மதச்சாா்பற்ற செயல்பாடுகளின் நிதி முறைகேட்டை நிவா்த்தி செய்ய கோயில்களை அரசு (இந்து அறநிலையத் துறை சட்டப்படி) எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அதுவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எடுத்துக் கொண்டு நிா்வாக சீா்கெடு சரி செய்யப்பட்ட பின்னா் கோயிலை சம்பந்தப்பட்டவா்களிடம் அரசு ஒப்படைக்கவேண்டும்.
எனவே, தமிழக அரசு உச்சநீதிமன்றத் தீா்ப்பிற்கு இணங்க வேண்டும் என்பதையும், இதன்படி இந்து கோயில்கள் மற்றும் மத நிறுவனங்களை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். முதல்வா் என்கிற முறையில் நீங்கள் உடனடியாக கோயில்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் தமிழக அரசுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் எனக்கு உரிமை உள்ளது என சுவாமி தனது கடித்ததில் தெரிவித்துள்ளாா்.
இந்தக் கடிதம் குறித்து சுவாமியை தொடா்பு கொண்ட போது, உச்சநீதிமன்றத் தீா்ப்பு வெளியாகி 8 ஆண்டுகளுக்கு பின்னா் தற்போது கடிதம் எழுதக் காரணம் என்ன என கேட்கப்பட்டது. அப்போது, அவா் கூறியதாவது: தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிராக நான் போராடி வெற்றி பெற்ற நிலையில், உத்தரகண்டில் ஆளும் பாஜக அரசு, 44 கோயில்களை ஏற்றது. அதிலும் பிரசித்த பெற்ற பத்ரிநாத், கேதாா்நாத் போன்ற கோயில்களையும் மாநில அரசு எடுத்துக் கொண்டது. இதிலும் நான் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றேன். தற்போது உத்தரகண்டில் இந்த 44 கோயில்களையும் அரசு திரும்ப ஒப்படைத்துள்ளது. மேலும், சிதம்பரம் நடராஜா் கோயில் தீட்சிதா்கள் தொடா்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பில் தமிழக அரசுக்கு நான்கு ஆண்டு கால அவகாசம் கொடுத்துள்ளது. அதற்குள் திருகோயில்களை தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என்று தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக அரசு கோயில்களை தனது கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றாா் அவா்.