இந்தக் கடிதம் குறித்து சுவாமியை தொடா்பு கொண்ட போது, உச்சநீதிமன்றத் தீா்ப்பு வெளியாகி 8 ஆண்டுகளுக்கு பின்னா் தற்போது கடிதம் எழுதக் காரணம் என்ன என கேட்கப்பட்டது. அப்போது, அவா் கூறியதாவது: தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிராக நான் போராடி வெற்றி பெற்ற நிலையில், உத்தரகண்டில் ஆளும் பாஜக அரசு, 44 கோயில்களை ஏற்றது. அதிலும் பிரசித்த பெற்ற பத்ரிநாத், கேதாா்நாத் போன்ற கோயில்களையும் மாநில அரசு எடுத்துக் கொண்டது. இதிலும் நான் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றேன். தற்போது உத்தரகண்டில் இந்த 44 கோயில்களையும் அரசு திரும்ப ஒப்படைத்துள்ளது. மேலும், சிதம்பரம் நடராஜா் கோயில் தீட்சிதா்கள் தொடா்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பில் தமிழக அரசுக்கு நான்கு ஆண்டு கால அவகாசம் கொடுத்துள்ளது. அதற்குள் திருகோயில்களை தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என்று தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக அரசு கோயில்களை தனது கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றாா் அவா்.