எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

எம்ஜிஆர்  சிலையிடம் கடிதம் கொடுத்து கண்ணீர் மல்க வெளியேறிய அதிமுக பிரமுகர்!

அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகுவதாக எம்ஜிஆர்  சிலையிடம் கடிதம் கொடுத்து கண்ணீர் மல்க வெளியேறினார்.

News image
Updated On :18 டிசம்பர் 2022, 6:43 am

DIN

சீர்காழியில் அதிமுக முன்னாள் மாவட்ட பிரதிநிதியும், முன்னாள் நகர கவுன்சிலரும் முன்னாள் பனைவெல்ல கூட்டுறவு சங்க இயக்குனருமான அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகுவதாக எம்ஜிஆர்  சிலையிடம் கடிதம் கொடுத்து கண்ணீர் மல்க வெளியேறினார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் வசிப்பவர் சேகர் 70. இவர் எம்ஜிஆர் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து உறுப்பினராக இருந்து பின்பு சீர்காழி நகர மன்ற உறுப்பினராக மூன்று முறையும், அதிமுக மாவட்ட பிரதிநிதியாகவும், பனை வெல்ல கூட்டுறவு சங்க இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். 

அதிமுக அறிவித்த போராட்டங்களில் பலமுறை கலந்து கொண்டு சிறை சென்றுள்ளார். அதிமுக அறிவித்த மாநாடு, பொதுக்கூட்டம், கட்சிப் பணிகளிலும் இரவு பகல் பாராமல் பல ஆண்டு உழைத்துள்ளார். தற்போது இவரை கட்சி நிர்வாகிகள் மதிப்பது இல்லை என்றும், நடந்து முடிந்த நகர மன்றத் தேர்தலில் சரிவர உறுப்பினர்கள் தேர்வு  செய்யாததால் அதிக அளவில் அதிமுக உறுப்பினர்கள் வெற்றி பெற இயலவில்லை. நான்காவது வார்டு சுமார் 20 வருடமாக அதிமுக கோட்டையாக இருந்துள்ளது. வேட்பாளர் தேர்வு சரியாக செய்யாததால் அதிமுக வெற்றி பெறவில்லை. 

கட்சியின் ஒற்றுமை சீர்குலைந்து வருகிறது. கட்சிக்குள் நான்கு குழுக்களாக செயல்படுவதால் முன்னணி  நிர்வாகிகளிடம் கலந்து யோசிக்காமல் தனக்கு வேண்டியவர்களுக்கு பொறுப்பு கொடுத்து செயல்படுவதால் என்னை போன்ற உறுப்பினர்களை உதாசனப்படுத்தி அவமானப்படுத்துகிறார்கள். சிலர் பதவிக்கு வந்தவுடன்  தொண்டர்களை மறந்து விடுகின்றன  எனவே எனது உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக முடிவு எடுக்கிறேன் என எம்.ஜி.ஆர் சிலையிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

எம்ஜிஆர் சிலையிடம் மனு கொடுத்து வந்த சேகர் கண்ணீர் மல்க கூறுகையில், எம்ஜிஆர் ரசிகன் நான்; எம்ஜிஆர் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து கட்சியில் பயணித்து வருகிறேன்.  கட்சியை விட்டு விலக மணமில்லாமல் விலகுவதாகவும், எனது விலகல் கடிதத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர்  பவுன்ராஜ் ஆகியோரிடம்  அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.