திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சிக்குள்பட்ட 15 வார்டுகளில், 2ஆவது வார்டில் போட்டியிடுவதற்கு திமுக சார்பில் சுபாஷினி, அதிமுக சார்பில் அல்லி ராணி, பாஜக சார்பில் ராமலட்சுமி, அமமுக சார்பில் ஜெயா உள்பட 9 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
வேட்பு மனு திரும்ப பெறுவதற்கு திங்கள்கிழமை(பிப்.7) பிற்பகல் 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், 2ஆவது வார்டுக்கு போட்டியிட மனு அளித்திருந்த 8 பேர் மனுக்களை திரும்ப பெற்றனர்.
இதனால், திமுக வேட்பாளர் சுபாஷினி போட்டியின்றி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
13ஆவது வார்டிலும் திமுக வெற்றி
அதேபோல் நிலக்கோட்டை 13ஆவது வார்டில் திமுக வேட்பாளர் பெ.சாமுண்டீஸ்வரி, அதிமுக வேட்பாளர் சிவகாமி, சுயேச்சை வேட்பாளராக லதா ஆகிய 3 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இதில், அதிமுக வேட்பாளர் உள்ளிட்ட 2 பேர் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றதை அடுத்து திமுக வேட்பாளர் சாமுண்டீஸ்வரி போட்டியின்றி வெற்றிப் பெற்றார்.
இதனை அடுத்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட இருவருக்கும், வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.