மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு பிப்ரவரி 18 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லி இயக்குனர் நாராயண பாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, மருத்துவக் கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள் அல்ல. இளநிலை மருத்துவப் படிப்பபுக்கான வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது.
இதையும் படிக்க- திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிவு: விசாரணை தொடக்கம்
ஒருவாரம் அறிமுக வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும்.
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 16 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் அவகாசம் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.