தமிழகத்தில் புதிதாக 1,634 பேருக்கு கரோனா; சென்னையில் 341

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,634 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 17 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் புதிதாக 1,634 பேருக்கு கரோனா; சென்னையில் 341


தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,634 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 17 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் நேற்று 2,296 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 1,634-ஆக குறைந்துள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது.

அதில், இன்று 95,750 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில், புதிதாக 1,634 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 34,37,896-ஆக அதிகரித்துள்ளது.

ஒரு நாளில் மட்டும் 17 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த பாதிப்பு 37,932-ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரு நாளில் மட்டும் 7,365 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 33,64,013-ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் 341 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 7,47,2000ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com