நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் 134 வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் காங்கிரஸ் வேட்பாளரைப் பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றார்.
சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம் மேற்கு மாம்பலம் 134-வது வார்டில் பா.ஜ.க சார்பில் உமா ஆனந்தன் போட்டியிட்டார். அவருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் சுசீலா கோபாலகிருஷ்ணன், அ.தி.மு.க. சார்பாக அனுராதா ஆகியோர் போட்டியிட்டனர். கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று காலை 8 மணிமுதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. சென்னை மாநகராட்சியின் 134 வார்டிலும் வாக்குகள் எண்ணப்பட்டன.
இதில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட உமா ஆனந்தன் 5,539 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் மற்ற வேட்பாளர்களை விடவும் சுமார் 2 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
உமா ஆனந்தனின் இந்த வெற்றியே சென்னை மாநகராட்சியில் பா.ஜ.க. பெற்ற முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.