தமிழகத்தில் புதிதாக 1,728 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தில் புதிதாக 1,728 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், ஒருவர் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்தவர்.
மேலும் 662 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | தமிழகத்தில் இன்று 2,34,175 சிறார்களுக்கு தடுப்பூசி
இதுவரை மொத்தம் 27,05,696 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 36,796 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 10,364 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மாவட்டங்கள்:
சென்னையில் அதிகபட்சமாக 876 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 158 பேருக்கும், கோவையில் 105 பேருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.