/

பொங்கல் பேருந்துகளில் 75% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி

பொங்கல் பேருந்துகளில் 75% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :10 ஜனவரி 2022, 3:42 pm

DIN

பொங்கல் பேருந்துகளில் 75% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மருத்துவ வல்லுநர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.10) ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து இந்த புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஜனவரி 14 முதல் 18 வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

தற்போது ஊரடங்கு காலங்களில் தடை செய்யப்பட்ட மற்றும்
அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகள் தொடர்ந்து அமலில்
இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.