சென்னை: தமிழகம் முழுவதும் இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகை மூட்டம் சூழ்ந்து கொண்டது.
இதையும் படிக்க.. பூஸ்டர் தடுப்பூசி பெயரில் புதிய மோசடி: மக்களே எச்சரிக்கை
அதிகாலை முதலே பொதுமக்கள் பலரும் தங்கள் வீட்டு வாயிலில், பழைய பொருள்களை போகியிலிட்டு எரிக்கத் தொடங்கினர். சிறார்கள் பலரும் மேளத்தை இசைத்து, பாடல்கள் பாடி போகிப் பண்டிகையை வெகு உற்சாகமாகக் கொண்டாடினர்.
போகிப் பண்டிகையின்போது ஏராளமானோர் போகி கொளுத்துவதால், புகை சூழ்ந்து கொண்டது. ஏற்கனவே பனி மூட்டம் இருந்த நிலையில், அதனுடன் புகைமூட்டமும் சேர்ந்து கொண்டது.
காலையில் கடுமையான புகைமூட்டம் காரணமாக, வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். ரயில்களும் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.