தமிழ்நாட்டில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இரவுநேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த 7-ம் தேதி முதல் இரவுநேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.
இதையும் படிக்க | மாணவி தற்கொலையில் மதப்பரப்புரை புகார் இல்லை - பள்ளிக்கல்வித்துறை
இந்த நிலையில், கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, முதல்வர் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க | பிப்.1 முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள்: முதல்வர் ஸ்டாலின்
இதைத் தொடர்ந்து, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க | பிப்.15 வரை எவற்றிற்கெல்லாம் கட்டுப்பாடுகள்?
இதன்படி, நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை (30-1-2022) முழு ஊரடங்கும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..