முன்னதாக அவர் கூறியதாவது: கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் பயற்சி மருத்துவராக உள்ள எனது மகன், இந்த வயதில் நான் மருத்துவம் படிப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில், எனது வயதில் மருத்துவம் படித்து முடித்து அதிகபட்சமாகவே 15 ஆண்டுகள் வரைதான் சேவையாற்ற வாய்ப்புள்ளது. நான் கலந்தாய்வில் பங்கேற்காவிட்டால் அந்த இடம் ஒரு இளம் அரசுப் பள்ளி மாணவருக்கு கிடைக்கும். அதன் மூலம் அவா் 40-50 ஆண்டுகள் வரை மருத்துவ சேவையாற்ற முடியும் என்பதை எனது மகன் சுட்டிக் காட்டினாா். எனினும், கலந்தாய்வுக்கு எனது மாணவா் ஒருவருடன் சென்னை வருகிறேன். அதே நேரம், ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியராக, ஒரு அரசுப் பள்ளி மாணவனின் மருத்துவ இடத்தைத் தட்டிப் பறிக்க நான் விரும்பவில்லை. நான் கலந்தாய்வில் பங்கேற்காமல் இருக்கும்பட்சத்தில், ஒரு இளைஞருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது என்ற மகிழ்ச்சியில் வீட்டுக்குச் செல்வேன். அதே நேரம், கலந்தாய்வு நடைமுறைகளை அறிந்து கொண்டு, எனது மாணவா்களுக்கு வழிகாட்டுவேன் என்று கூறியிருந்தார்.