ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஓ.பி.எஸ்.ஸுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

ஓ.பன்னீர் செல்வத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

News image
சென்னை உயர்நீதிமன்றம்
Updated On :11 ஜூலை 2022, 5:54 am

DIN

சென்னை: ஓ.பன்னீர் செல்வத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கட்சி உறுப்பினர் நம்பிக்கையை பெற முடியாதவர்கள் நீதிமன்றங்களை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர். நீதிமன்றத்தின் மூலமாக சாதிக்க முயற்சிக்கிறார் என ஓபிஎஸுக்கு நீதிபதி கிருஷ்ணன ராமசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கையேப்பம்தான் மேலோங்கி இருக்கும் என நீதிபதி கிருஷ்ணன ராமசாமி தெரிவித்துள்ளார்.

மேலும்,  ஒருங்கிணைப்பாளர் என்பவர் கட்சிநலன், வளர்ச்சிக்கு ஏற்றவாறு உறுப்பினர்களை சமாதானம் செய்ய வேண்டும். பொதுக்குழுவில் தீர்வு கிடைக்காவிடில் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம். சிறந்த நிர்வாகத்துக்கான கட்சி விதிகளை வகுக்கும்  விவாகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது.

சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடத்தவில்லை எனில் உச்ச நீதிமன்றம்தான் பரீசிலிக்க முடியும் என்று நீதிபதி கிருஷ்ணன ராமசாமி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.