சென்னை: சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழுவில், ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்க சிறப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுக்குழுவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த பொருளாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் பொதுக்குழுவில் பேசிய நத்தம் விஸ்வநாதன் கூறினார்.
இதையும் படிக்க.. போர்க்களம் போல் காட்சியளிக்கும் அதிமுக தலைமை அலுவலகம் (விடியோ)
மேலும், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனைவரையும் அதிமுகவிலிருந்து நீக்க சிறப்புத் தீர்மானம் கொண்டு வரப்படுவதாகவும் அறிவித்தார்.
கட்சி விதிகள் மற்றும் கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்ட ஓ. பன்னீர்செல்வம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் நத்தம் விஸ்வநாதன் கொண்டு வந்த சிறப்பு தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிக்க.. அதிமுக பொதுச் செயலாளர் பதவி குறித்த விதி ஒட்டுமொத்தமாக ரத்தானது
ஓ. பன்னீர்செல்வம் திமுகவுடன் நட்பு பாராட்டியது மற்றும் ஆட்சியைப் பாராட்டியது அனைத்தும் கட்சியின் விதிகளுக்கு முரணானது. பொருளாளர், அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஓ. பன்னீர்செல்வத்துடன் வைத்திலிங்கம், ஜெசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரையும் அதிமுகவிலிருந்து நீக்கி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.