தமிழில் பதவியேற்றுக் கொண்ட மாநிலங்களவை உறுப்பினர்கள்

மாநிலங்களவைக்கு தமிழகத்திலிருந்து புதிதாக தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்று தமிழில் பதவியேற்றுக் கொண்டனர்.
தமிழில் பதவியேற்றுக் கொண்ட மாநிலங்களவை உறுப்பினர்கள்

மாநிலங்களவைக்கு தமிழகத்திலிருந்து புதிதாக தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்று தமிழில் பதவியேற்றுக் கொண்டனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. முதல் நாள் கூட்டத்தொடரில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், திமுகவின் கே.ஆர்.என். ராஜேஷ் குமார், ஆர். கிரிராஜன், எஸ். கல்யாணசுந்தரம், அதிமுகவின் சி.வி.சண்முகம் ஆகியோர் இன்று அவை தொடங்கியவுடன் பதவியேற்றனர்.

இவர்கள் அனைவரும் தமிழ் மொழியில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com