சென்னை விமான நிலையத்தில் புதிய வசதி: மகிழ்ச்சியில் பயணிகள்

சென்னை விமான நிலையம் செல்லும் பயணிகள் வசதிக்காக, இரண்டு புதிய கண்ணாடியால் ஆன மின் தூக்கிகள் சேவை நேற்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் புதிய வசதி: மகிழ்ச்சியில் பயணிகள்
சென்னை விமான நிலையத்தில் புதிய வசதி: மகிழ்ச்சியில் பயணிகள்


சென்னை: சென்னை விமான நிலையம் செல்லும் பயணிகள் வசதிக்காக, இரண்டு புதிய கண்ணாடியால் ஆன மின் தூக்கிகள் சேவை நேற்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மின் தூக்கியும் தலா 20 பேரை தூக்கிச்செல்லும் திறன் படைத்ததாகவும், 360 டிகிரி கோணத்தில் உள்ளேயிருந்து விமான நிலையத்தை பார்க்கும் வகையில் கண்ணாடியால் ஆனதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மின் தூக்கிகள் மூலம், சென்னை விமான நிலையத்துக்கு வரும் பயணிகள், வருகை, புறப்பாடு மற்றும் உள்ளூர், வெளிநாட்டு விமான முனையங்களுக்கு மிக எளிதாகச் செல்ல வழிவகை ஏற்பட்டுள்ளது.

இந்த மின் தூக்கிகளுக்கு உள்ளேயிருக்கும் வெளியேயிருந்தும் பார்க்க முடியும் என்பதால் பயணிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com