தமிழுக்காகவும் தமிழர் நலனுக்காகவும் வாழ்நாளெல்லாம் போராடியவர் கருணாநிதி என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசு சார்பில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயம், முரசொலி அலுவலகம், ஓமந்தூரார் அரசினர் தோட்டம் ஆகிய இடங்களில் உள்ள கருணாநிதி சிலைக்கு மரியாதை செலுத்தினார். இறுதியாக சென்னை மெரீனாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மலர் அஞ்சலி செலுத்தினார்.
இதையும் படிக்க | சென்னையில் மலர்க் கண்காட்சி இன்று தொடங்கியது! - முழு விவரம்
இதையடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''தமிழுக்காகவும் தமிழர் நலனுக்காகவும் வாழ்நாளெல்லாம் போராடிய போராளி; ஆட்சித் தேரைச் சமூகநீதிப் பாதையில் செலுத்திய சமத்துவச் சிந்தனையாளர்; திராவிடக் கொள்கைகளால் தமிழ்ச் சமூகத்தைத் தட்டியெழுப்பிய பகுத்தறிவாளர்; 'உடன்பிறப்பே...' என நம்மை உளமார அழைத்து உணர்வூட்டிய தலைவர்.
இன்னும் ஓராண்டில் நூற்றாண்டு காணும் தமிழ்நாட்டின் தலைமகன் - தன் உதிரத்தால் எனைச் சமைத்த எந்தை 'தமிழினத் தலைவர்' கலைஞரைப் போற்றினேன்' என்று பதிவிட்டுள்ளார்.
தமிழà¯à®à¯à®à®¾à®à®µà¯à®®à¯ தமிழர௠நலனà¯à®à¯à®à®¾à®à®µà¯à®®à¯ வாழà¯à®¨à®¾à®³à¯à®²à¯à®²à®¾à®®à¯ பà¯à®°à®¾à®à®¿à®¯ பà¯à®°à®¾à®³à®¿; à®à®à¯à®à®¿à®¤à¯ தà¯à®°à¯à®à¯ à®à®®à¯à®à®¨à¯à®¤à®¿à®ªà¯ பாதà¯à®¯à®¿à®²à¯ à®à¯à®²à¯à®¤à¯à®¤à®¿à®¯ à®à®®à®¤à¯à®¤à¯à®µà®à¯ à®à®¿à®¨à¯à®¤à®©à¯à®¯à®¾à®³à®°à¯; திராவிà®à®à¯ à®à¯à®³à¯à®à¯à®à®³à®¾à®²à¯ தமிழà¯à®à¯ à®à®®à¯à®à®¤à¯à®¤à¯à®¤à¯ தà®à¯à®à®¿à®¯à¯à®´à¯à®ªà¯à®ªà®¿à®¯ பà®à¯à®¤à¯à®¤à®±à®¿à®µà®¾à®³à®°à¯; 'à®à®à®©à¯à®ªà®¿à®±à®ªà¯à®ªà¯...' à®à®© நமà¯à®®à¯ à®à®³à®®à®¾à®° à®à®´à¯à®¤à¯à®¤à¯ à®à®£à®°à¯à®µà¯à®à¯à®à®¿à®¯ தலà¯à®µà®°à¯! (1/2) pic.twitter.com/WIv0vjd2Dy
â M.K.Stalin (@mkstalin) June 3, 2022
இதையும் படிக்க | கச்சத்தீவு: ஸ்டாலின் கேட்டதும் கருணாநிதி சொன்னதும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என் கஷ்டங்களைப் புரிந்துகொண்டு ஆறுதல் சொல்பவர் துல்கர் சல்மான்: அனுபமா பரமேஸ்வரன்

கேரளம் எனப் பெயர் மாற்றம்! மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 17 - நேரலை!

முதல்வர் வரும்போது எழுந்து நிற்க வேண்டுமா? அவைத் தலைவர் சொன்னது என்ன?
விடியோக்கள்

பயிர்க்கடன்: முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு! | TN Assembly | TVK



